எல்லாருக்கும் நமஸ்காரம்! ரொம்ப நாளாவே ஸ்வாமி சம்பந்தமான விஷயங்கள் எழுதனும்னு ஒரு ஆசை உண்டு. என்னதான் மனுஷ்ய வாழ்க்கைல இருக்கும் மாயை பத்தி ஹாஸ்யமா தக்குடுபாண்டி ப்ளாக்ல எழுதிண்டு வந்தாலும் இதுதான் சாஸ்வதமானது அப்பிடிங்கர எண்ணம் மனசுல எப்போதுமே உறுதியா உண்டு.
இருந்தாலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஏற்கனவே ஆன்மீகத்தை பத்தி ரொம்ப பிரமாதமா எழுதிண்டு இருக்கா, இவாளுக்கு நடுல இந்த குழந்தை எழுதர்து அப்படிங்கர்து கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். திவா அண்ணா,மதுரையம்பதி அண்ணா,TRC சார்,கீதா மேடம்,குமரன் அண்ணா,KRS அண்ணா,பரவஸ்து அண்ணா இவாளுக்கு நடுல அடியேன் பேசர்து, திக்குவாய்க்காரன் கச்சேரி பண்ணர்துக்கு முயற்சி பண்ணர மாதிரிதான். காட்டுல மழை பெய்து முடிச்சதுக்கு அப்புறம் சிங்கம்,புலி,கரடி & யானை மாதிரி பெரிய ஆட்கள் எல்லாம் அவாளோட மேல இருக்கும் ஈரம் போகர்துக்காக வெயில்ல நின்னு உலர்திண்டு இருந்தாளாம், இதை பாத்துட்டு அங்க இருந்த ஒரு சுண்டெலி நாமளும் எதாவது உலர்த்தனுமேனு யோசிச்சு தன்னோட குட்டி வாலை போய் காய வச்சுதாம். அதை மாதிரி தக்குடுவும் ஸ்வாமி சம்பந்தமா எழுத வந்துருக்கு...;)இருந்தாலும் இவாளை மாதிரி பெரிய அளவுல எழுதாம என்னை மாதிரி குழந்தேளுக்கு புரியர மாதிரி குட்டி குட்டி கதை,ஸ்லோகம், நிகழ்ச்சிகள் எல்லாம் சமயம் கிட்டும் போது போடலாம்னு ஒரு எண்ணம். அதன் காரணமாக உதித்ததுதான் இந்த 'உம்மாச்சி காப்பாத்து'
கணபதி வந்தனம்
//கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி டுண்டி விக்னேஸ்வர பாத பங்கஜம்//
(அர்த்தம் - யானைமுகம் உடையவரும், பூதகணங்களாலும் சேவிக்கப்படுபவரும்,விளாம்பழம் மற்றும் நாவல் பழத்தை பிரியத்தோடு உண்பவரும், உமாதேவிக்கு பிரியமானவரும்,பக்தர்களின் சோகங்கள் அனைத்தையும் நாசம் செய்பவரும் ஆன டுண்டி விக்னேஷ்வரரின் பாத கமலங்களை வணங்குகிறேன்.)
Saturday, May 22, 2010
Subscribe to:
Posts (Atom)